districts

திருவாரூர் - காரைக்குடி ரயில் பயண நேரம் குறைப்பு

திருவாரூர், பிப்.3- திருவாரூர்-காரைக்குடி, திருவாரூர் முன்பதிவில்லா சிறப்பு விரைவு டெமு ரயிலின் பயண நேரம் மீண்டும் குறைக் கப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதையில் உள்ள கேட்டுக்களுக்கு போதிய பணி யாட்கள் நியமிக்கப்படாத கார ணத்தினால், திருவாரூர்- காரைக் குடி இடையே மொபைல் கேட்கீப்பர்களை கொண்டு டெமு ரயில் (வண்டி எண் 06197/06198) 01.06.2019 ஆம் தேதி முதல் இயக்கப்பட்டது. கொரோனாத் தொற்றின் காரணமாக 21.3.2020 அன்று முதல்  நிறுத்தப்பட்ட இந்த பயணி கள் ரயில், மீண்டும் இத் தடத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், பட்டுக் கோட்டை, பேராவூரணி வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கம் மற்றும் இதர ரயில் உபயோகிப்பா ளர் சங்கங்கள் தொடர்ந்து வைத்த கோரிக்கையின் காரண மாக 04.08 .2021 முதல் மீண்டும் சிறப்பு விரைவு ரயிலாக இயக்கப்பட்டது. தொடர்ந்து, ரயில் உபயோ கிப்பாளர் சங்கங்களின் கோரிக் கையின் காரணமாக, திருவாரூர்-பட்டுக்கோட்டை இடையே உள்ள கேட்டுகளுக்கு முன்னாள் ராணுவத்தினர் பணி நியமனம் செய்யப்பட்ட காரணத்தினால் 26.01.2022 முதல் திருவாரூர் பட்டுக்கோட்டை இடையே 1.45 மணி நேரத்தில் இந்த ரயில் சென்றது.

பட்டுக்கோட்டை - காரைக் குடி இடையே போதிய அளவு கேட் மேன்கள்  நியமிக்கப்பட்டாத காரணத்தினால் இந்த ரயில் பட்டுக்கோட்டை - காரைக்குடி  இடையே செல்ல 3 மணி நேரம் எடுத்துக் கொண்டது. திரு வாரூரிலிருந்து காரைக்குடிக்கு மொத்தம் 4.45 மணி நேரத்தில் சென்றது. தற்சமயம் பட்டுக்கோட்டை- காரைக்குடி  இடையே  உள்ள ரயில்வே கேட்டுகளுக்கு முன்னாள் ராணுவத்தினரை பணியில்  நியமிக்கப்பட்ட கார ணத்தினால் வருகிற 07.02.22 முதல் திருவாரூரிலிருந்து காரைக்குடிக்கு இந்த ரயில் 3.30 மணி நேரத்திலேயே சென்று விடும். இந்த முன்பதிவில்லா சிறப்பு டெமு ரயில் (வண்டி எண் 06541/06542) மயிலாடு துறையிலிருந்து காலை 6.45 மணிக்கு  புறப்பட்டு திருவாரூ ருக்கு காலை 7.45 மணிக்கு வந்தடைகிறது. மீண்டும் திருவாரூரிலிருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு காலை 9.55 மணிக்கு வருகிறது. பட்டுக் கோட்டையிலிருந்து புறப்பட்டு காரைக்குடிக்கு நண்பகல் 11.45 மணிக்கு செல்கிறது. மீண்டும் காரைக்குடியி லிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு 5.23 மணிக்கு வருகிறது. பட்டுக் கோட்டையில் இருந்து புறப்பட்டு  இரவு 07.30 மணிக்கு திருவாரூருக்கு செல்கிறது. திருவாரூரிலிருந்து  இரவு 08.15  மணிக்கு  புறப்பட்டு, மயி லாடுதுறைக்கு இரவு 09.15 மணிக்கு செல்கிறது.

ஞாயிற்றுக் கிழமை இந்த ரயில் பராமரிப்பு பணிகளுக்காக செல்வதால் இயங்காது. 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு,  10 வருடங்கள் கழித்து  பகல் நேர கேட்கீப்பர்கள் நியமிக்கப்பட்டு  இந்த ரயில் தடத்தில் ரயில் செல்லவிருக்கிறது. இரவு நேரங் களில் பணிபுரிய ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் கேட் மேன்கள் நியமனம் செய்யப்படும் போது இரவு நேரங்களில் பயணி கள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் செல்ல வாய்ப்பு ஏற்படும்.  ரயில்வே கேட்டுகளுக்கு முன்னாள் ராணுவத்தினரை நியமிக்க நடவடிக்கை எடுத்த தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டி னம், காரைக்குடி, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்க ளுக்கும், தென்னக ரயில்வே  பொது மேலாளர், திருச்சி கோட்ட  ரயில்வே மேலாளர் மற்றும் ரயில்வே துறை அதிகாரி களுக்கு, பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் நன்றி தெரி வித்தனர்.