திருவாரூர், ஜன.2- திருத்துறைப்பூண்டி அரசு அலுவலகங்களில் கழி வறை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் செய்தியா ளரிடம் கூறுகையில், ‘‘திரு வாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், தனி வட்டாட்சியர் ஆதிதிராவிடர் நலன், தமிழ்நாடு கிராம நிர் வாக அலுவலர்கள் சங்கம், வட்டார வேளாண்மை விரி வாக்க மையம், சார்நிலைக் கருவூல அலுவலகம், செயற்பொறியாளர் அலு வலகம், பொது சேவை மையம் உள்ளிட்ட பல் வேறு துறை சார்ந்த அலுவல கங்கள் ஒரே இடத்தில் இயங்கி வருகின்றன. இதில் தினமும் வய தான முதியோர்கள், குழந்தைகள், மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், ஊன முற்றோர்கள் இளைஞர்கள், ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றன. ஆனால், இவ்வலுவ லகங்களில் பொது கழிவறை வசதி இல்லாததால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, அலுவலகங்களில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கழி வறை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்’’ என கூறி னார்.