மன்னார்குடி, ஜன.29- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அசோகா சிசுவிகார் மெட்ரிக் பள்ளியில் 38-வது விளையாட்டு விழா மன்னார்குடி பின்லே மைதானத்தில் நடைபெற்றது. மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் ஆர்.கீர்த்தனா தலைமை ஏற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார். திருவாரூர் மாவட்ட விளையாட்டு கழக மாவட்டத் தலை வர் ஏ.எஸ்.அசோகன் முன்னிலை வகித்தார். வர்த்தக சங்க தலைவர் ஆர்.வி. ஆனந்த், நகரமன்ற உறுப்பினர் சாம்பு வெங்கடேஷ் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். பள்ளித் தலைமை ஆசிரியர் சுந்தரி நன்றி கூறினார். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.