திருவாரூர், ஜன.29- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் திருக் கொட்டாரம் அறுவடை போராட்டத்தில் சிறை சென்ற சிபிஎம் மூத்த தோழர் கோ. மாரியப்பன் படத்திறப்பு விழா திருக்கொட்டாரத்தில் உள்ள அவரின் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. சிபிஎம் நன்னிலம் ஒன் றிய செயலாளர் கே.எம்.லிங் கம் தலைமை வகித்தார். ஒன் றியக் குழு உறுப்பினர்கள் தியாகு, ரஜினிகாந்த், எம்.ராமமூர்த்தி ஆகியோர் முன் னிலை வகித்தனர். தோழர் கோ.மாரியப்பன் படத்தை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப் பினர் நாகை மாலி திறந்து வைத்தார். சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் ஜெ.முக மது உதுமான் மற்றும் ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் பங் கேற்றனர்.