districts

எம்ஜிஆர் அரசுக் கல்லூரிக்கு விரைவில் இடத்தை தேர்வு செய்க! மாணவர் சங்க ஒன்றிய மாநாடு கோரிக்கை

குடவாசல், ஜுலை 26 - இந்திய மாணவர் சங்கத்தின் குட வாசல் ஒன்றிய 5 ஆவது மாநாடு தியாகி தங்கையன் நினைவு அரங்கத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு ஒன்றிய தலைவர் சுகதேவ் தலைமை வகித் தார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட செயலாளர் பா.ஆனந்த் உரை யாற்றினார், சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ஆறு.பிரகாஷ் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை அறி வித்து நிறைவுரையாற்றினார். 12 பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு  செய்யப்பட்டது. தலைவராக மனோஜ்,  செயலாளராக சுகதேவ், துணை தலை வராக அரவிந்த், துணைச் செயலாள ராக அசின் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். குடவாசல் எம்ஜிஆர் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு உடனடியாக இடத்தை தேர்வு செய்து கட்டிட பணியை  துவக்க வேண்டும். அனைத்து அரசுப் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஆசிரியர் காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ்  பாசை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
நன்னிலம்
நன்னிலம் ஒன்றியத்தில் நடை பெற்ற மாநாட்டுக்கு வி.பிரபா தலைமை  வகித்தார், மாநாட்டில் தலைவராக கைலாஷ், செயலாளராக கார்த்தி, துணைத் தலைவராக பரணி, துணைச் செயலாளராக அபி மற்றும் 15 பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது. நன்னிலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் சுற்றுச்சுவர் அமைத்து விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். அரசு பள்ளிகளில் பிடிஏ  என்ற பெயரில் நன்கொடை வசூலிப் பதை நிறுத்த வேண்டும். நெடுங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி களுக்கான பழுதடைந்த விடுதியை இடித்துவிட்டு புதிய கட்டிட வேண்டும்.  நன்னிலம் கல்லூரி மாணவிகளுக்கான பிற்படுத்தப்பட்ட நல விடுதி கட்டிட பணியை விரைந்து முடித்து நடப்பு கல்வி ஆண்டில் திறந்திட வேண்டும். ஆதிதிராவிடர் நல விடுதிக்கான இடத்தை தேர்வு செய்து பணிகளை துவக்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.