மன்னார்குடி, மார்ச் 30- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர் பி.கண்ணனை வியாழனன்று சமூக விரோதிகள் தாக்கியதை கண்டித்தும், தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டனஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வேளாங்கண்ணி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செய லாளர் டி.முருகையன், பாஸ்கர், ஊரக வளர்ச்சி ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் எம்.முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.