districts

img

ரூ.1.35 கோடி மோசடி தலைமறைவாக இருந்த பைனான்சியர் எஸ்.நடராஜன் கைது

திருவாரூர், மார்ச் 30 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் எடையூர் ஊராட்சியில் எஸ்.பி.ஆர் ஏஜென்ஸி என்ற பெய ரில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கை விற்பனை செய்வதாக கூறி நெடுபலம் ஊராட்சியில் வசித்து வரும்  ஆர்.முருகானந்தம் என்பவரி டம் ரூ.1.35 கோடி பணத்தை பெற்று ஏமாற்றிய மோசடி வழக்கில் பைனான்சியர் எஸ். நடராஜன் கைது செய்யப்பட்டார். திருத்துறைப்பூண்டி நகரில் வசித்து வரும்  பைனான்சியர் எஸ்.என்.ஆர். என்கின்ற எஸ். நடராஜன் என்பவர் காவல்துறையின் கைது  நடவடிக்கைக்கு பயந்து ஒரு மாதத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்தார். சென்னை  உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் திருவாரூர் மாவட்ட எஸ்.பி. சி.விஜயகுமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் நடராஜனை கைது செய்வதற்காக, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 406, 420, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்த திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் நட ராஜனை தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 28.3. 2022 (திங்கட்கிழமை) மதியம் 2.30  மணியளவில் சென்னை துரைப் பாக்கத்தில் தனது மகன் வீட்டில்  பதுங்கியிருந்த நடராஜனை காவல்துறையினர் கைது செய்த னர். உடனடியாக திருவாரூர்  மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட நடராஜனை 29.3.2022 (செவ்வாய்க் கிழமை) திருத்துறைப்பூண்டி நீதித்துறை நடு வர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக முன்னி லைப்படுத்தினர். விசாரணை செய்த நீதி பதி சிறையில் அடைக்க உத்தரவிட்டதன்  பேரில் எஸ்.நடராஜன் திருத்துறைப்பூண்டி  கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.  ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நடராஜன்  தரப்பில் முன்ஜாமீன் பெற மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், அவர் கைது செய்யப் பட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர் பி.வைகுண்டம்  மற்றும அவரது மகன் வை.பரணி நிபந்தனை  ஜாமீனில் வெளியில் உள்ளனர்.