குடவாசல், நவ.24- கொரடாச்சேரி ஒன்றியம் அரசவனங் காடு ஊராட்சி பகுதியில் திருவாரூர்-குட வாசல் சாலை ஓரமாக 40 ஆண்டுகளாக மக்கள் குடியிருக்கும் வீடுகளை இடிக்க முயன்ற செயலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, கட்சியின் கொரடாச் சேரி ஒன்றியச் செயலாளர் டி.ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.சீனி வாசன், கே.எஸ்.செந்தில், விவசாய சங்க தலைவர்கள் ஆர்.மணியன், ஆர்.மருதை யன், கே.செந்தில், அரசவனங்காடு ஊராட்சி மன்ற தலைவர் சுலக்சனா லோக நாதன், ஒன்றியக் குழு உறுப்பினர் சி.லோக நாதன் ஆகியோருடன் திருவாரூர் துணை வட்டாட்சியர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் நடத்திய பேச்சுவார்த்தை யில் தற்போது குடியிருக்கும் இடத்திற்கு மாற்றாக வேறு இடத்தில் நத்தம் பட்டா இடம் தருவதாக உறுதியளித்தனர். இதனையடுத்து மாற்றிடமாக உரிய இடத்தில் நத்தம் பட்டாவில் வழங்கினால் இரண்டு மாதத்தில் தற்போது குடியிருக்கும் வீடுகளை காலி செய்வதாக குடியிருப்பு வாசிகள் ஒத்துக்கொண்டனர். கோரிக்கை களை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு உறுதி யளித்ததையடுத்து தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.