districts

img

மழையால் சேதமடைந்த சாலைகளை உடனே சீரமைத்திடுக! விதொச கொரடாச்சேரி ஒன்றிய மாநாடு கோரிக்கை

குடவாசல், டிச.14-  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் கொரடாச்சேரி ஒன்றிய 19-ஆவது மாநாடு ஒன்றியத்  தலைவர் ஆர்.மருதையன் தலைமையில் நடைபெற் றது. மூத்த தோழர் பி. கண்ணுசாமி மாநாட்டு கொடி யை ஏற்றினார். மாவட்டத் தலைவர் எம்.கலைமணி துவக்கி வைத்தார். சிபிஎம் செயற்குழு உறுப்பினர் பி. கந்தசாமி,  ஒன்றியச் செயலா ளர் டி.ஜெயபால், மாவட்டக்  குழு உறுப்பினர் கே.சீனி வாசன் ஆகியோர் வாழ்த்திப்  பேசினர். விவசாயத் தொழி லாளர் சங்க மாநில பொதுச்  செயலாளர் வீ.அமிர்த லிங்கம் நிறைவுரையாற்றி னார். தலைவராக ஆர்.மணி யன், செயலாளராக கே. கோபிராஜ், பொருளாளராக ஆர்.மருதையன் உள்ளிட்ட 17 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. வடகண்டம் ஊராட்சிக்கு உட்பட்ட எட்டியலூர் பகுதி யில் அரிஜன நலத்துறை மூலம் வாங்கப்பட்ட 4 ஏக்கர்  நஞ்சை நிலத்தை வீட்டு மனை இல்லாத தகுதியான நபர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும், மழை யால் பாதிக்கப்பட்ட கிராம சாலைகளை உடனே சீர மைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.