குடவாசல், நவ.5 - அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கத்தின் வலங்கைமான் ஒன்றிய 20-வது மாநாடு ஆலங்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டு கொடியை மூத்த தோழர் ஆர்.கலிய பெருமாள் ஏற்றினார். ஒன்றிய தலைவர் கே.கலிய பெருமாள், ஒன்றிய குழு உறுப்பினர் பி.சிவகாமி ஆகியோர் தலைமை வகித்த னர். சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.கலைமணி துவக்க உரையாற்றினார். தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வி.எஸ்.கலிய பெருமாள், செயலாளர் கே.சுப்பிரமணியன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என். ராதா ஆகியோர் வாழ்த்து ரையாற்றினர். நூறு நாள் வேலையை பேரூராட்சி பகுதியிலும் விரிவுபடுத்தி முழுமையாக வழங்கிட வேண்டும். சட்டக்கூலி ரூ.281-ஐ முழு மையாக வழங்க வேண்டும். வலங்கைமான் ஒன்றியத் தில் 2020-21 இல் பயிர் காப்பீடு செய்து விடுபட்ட விவசாயிகளுக்கு முழுமை யாக பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டில் தலைவராக என்.சுப்பிரமணியன், செய லாளராக என்.பாலையா உட்பட 15 பேர் கொண்ட புதிய ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. சங்கத்தின் மாவட்ட துணைச் செய லாளர் பி.கந்தசாமி புதிய நிர்வாகிகளை அறிவித்து நிறைவுரையாற்றினார்.