திருவாரூர், நவ.3- நகராட்சி, மாநகராட்சி நிரந்தரப் பணியிடங்களை தனியார்மயமாக்கும் அர சாணை எண்-152 ஐ ரத்து செய்ய வேண்டும் என தமி ழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருவா ரூர் நகராட்சி அலுவலகம் முன்பு வியாழனன்று நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நக ராட்சி அலுவலர் சங்க மாவட் டத் தலைவர் எஸ்.விஜய குமார் தலைமை வகித்தார். நகராட்சி தூய்மை பணியா ளர் சங்க தலைவர் ஆர்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட் டச் செயலாளர் டி.முருகை யன், தமிழ்நாடு நகராட்சி அலுவலர் சங்கத்தின் மாநி லப் பொருளாளர் இரா.சாமி நாதன் உள்ளிட்டோர் பேசி னர். ஆர்ப்பாட்டத்தில், மக்க ளின் அடிப்படைத் தேவை யான, தூய்மைப் பணி, தெரு விளக்கு பராமரிப்புப் பணி, குடிநீர் வழங்கும் பணி முழு மையாக தனியாரிடம் ஒப்ப டைக்கும் நிலை ஏற்படு கிறது. இதனால், பொதுமக்க ளின் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற் படுவதுடன் வரும் காலங்க ளில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப் பட்ட மக்களின் அரசு வேலை என்பது மறுக்கப்படுவதுடன் மாநகராட்சி, நகராட்சி ஊழி யர்களின் வாரிசுதாரர்களின் கருணை அடிப்படை பணி நியமனமும் வாய்ப்புகளும் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை பரி சீலனை செய்து டி பிரிவு ஊழியர்களுக்கான பணி யிடங்களை உருவாக்கிட வேண்டும், பதவி உயர்வு பெறும் வகையில் புதிய அர சாணை பிறப்பித்தும், நக ராட்சி, மாநகராட்சி நிரந்தர பணியிடங்களை தனியார் மயமாக்கும் அரசாணை எண்-152 ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக் கையை வலியுறுத்தப்பட்டன.