திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி இராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லூயில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார். திருச்சிராப்பள்ளி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநர் மு.சந்திரன், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் காத்தனாமணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.