districts

img

மின் உற்பத்தி நிலைய தொழிலாளர்கள் 50 பேர் சிஐடியு-வில் இணைந்தனர்

மன்னார்குடி, செப்.24 - திருவாரூர் மாவட்டம் திருமக் கோட்டை எரிசக்தி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள்  50  பேர் மின் ஊழியர் மத்திய அமைப்பில் (சிஐடியு) சங்கத்தில் இணைந்தனர்.  இதற்கான விழா மற்றும் கொடி யேற்ற நிகழ்ச்சி திருமக்கோட்டையில் நடைபெற்றது. மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோட்டத்தலைவர் எஸ்.மோகனசுந்தரம் தலைமை வகித்தார்.  சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஜி. ரெகுபதி, மின் ஊழியர் மத்திய அமைப் பின் திருவாரூர்  திட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், துணைத் தலைவர் எம்.பக்கிரிசாமி, சிஐடியு இணைப்புச் சங்க தலைவர் டி.ஜெகதீசன் உள்ளிட் டோர் வாழ்த்திப் பேசினர். மாநிலச் செயலாளர்  எஸ்.ராஜாராமன் சங்கக் கொடியினை ஏற்றி வைத்தும், புதிதாக இணைந்தவர்களை வரவேற்றும் சிறப்புரையாற்றினார்.

;