திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத்தலைவர் வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ரகுராமன். இவரது மனைவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமலோக ஈஸ்வரி திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத்தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 11ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராமலோக ஈஸ்வரி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இன்று இவர் பதவியேற்கும் நிலையில் அதிகாலை 2 மணியளவில் அவரது வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.