districts

img

மனுநீதி சோழனுக்கு கல்தேர்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

திருவாரூர், ஜூன் 5 - திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவில் வளாகத்தில் மனுநீதி சோழன் கல்தேர் பணியினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இப்பணி யானது 28 மீட்டருக்கு சுற்றுச்சுவர் அமைத்தல், கருங்கல் தளம் அமைத்தல், மனுநீதி சோழன் கருங்கல் சிலை  அமைத்தல், வண்ணப்பூச்சு உள்ளிட்ட புனரமைப்பு பணி களுக்காக ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. இப்பணியினை ஒப்பந்த காலத்தில் தரமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரி வித்தார்.

;