districts

img

புத்தாண்டு நாளில் மக்கள் சபை கூட்டம்

திருவாரூர், ஜன.1 - ஆங்கில புத்தாண்டு நாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவாரூர் மாவட்டம் திருக்கரவாசல் ஊராட்சி கிளை சார்பில் கோமல் பகுதியில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு எஸ்.ரகுபதி  தலைமை வகித்தார். இதில், கோமல் பகுதி மக்கள் தங்க ளின் அடிப்படை, பொருளாதார, வாழ்வியல்  பிரச்சனைகளான சாலை, மின்விளக்கு வசதி கள், மயான கொட்டகை அமைத்து தருதல்,  மயான கொட்டகைக்கு செல்லும் சாலை களின் அவல நிலைகள், நூற நாள் வேலை வழங்குவதில் உள்ள பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது குறித்து பேசினர். இந்நிகழ்ச்சியில் மக்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், தங்களின் அடுத்த  தலைமுறைக்கு புத்தகம் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையிலும், மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் அனைவருக் கும் புத்தகங்கள் வழங்கி உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்  பா.கோமதி  மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.