districts

img

திறந்த வெளி சேமிப்புக் கிடங்குகளை திறந்திடுக! சுமை பணி தொழிலாளர்கள் மறியல்

திருவாரூர், ஜன.28- திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 25 வரு டங்களாக கிடாரம்கொண்டான், கடகம்பாடி, நட்டுவாக்குடி ஆகிய பகுதிகளில் இயங்கி  வந்த சேமிப்பு கிடங்குகளை பல்வேறு கார ணங்கள் காட்டி மாவட்ட நிர்வாகத்தால் மூடப் பட்டதை கண்டித்தும், மீண்டும் சேமிப்பு கிடங்குகளை திறக்க வலியுறுத்தியும், சுமைப்  பணி தொழிலாளர் சங்கம் சார்பில் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி முன்பு சாலை மறியல் நடைபெற்றது.  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே. கஜேந்திரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா,  மாவட்டப் பொருளாளர் இரா.மாலதி, மாவட்டத்  துணைத் தலைவர் எஸ்.வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.