திருவாரூர், ஜூன் 4- இந்திய அரசு மின் சாதனங்கள் தரக் கட்டுப்பாட்டு ஆணை 2003-ன்படி மின் சாத னங்கள் மத்திய அரசின் தரச்சான்று இல்லா மல் உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ, இரும்பு மற்றும் துருபிடிக்காத எஃகு பொருட்களை தயாரிப்பதோ, இருப்பில் வைத்திருப்பதோ, விற்பனை செய்வதோ கூடாது. அவ்வாறு தரக் கட்டுப்பாட்டு சான்றி தழ் இல்லாமல் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது. மின் சாதன பொருட்களை தயாரிக்கும் அல்லது விற்பனை செய்யும் நிறுவனங்களை ஆய்வு செய்யும் போது பொருள்கள் தரம் குறைந்ததாக இருந்தால் பொது மக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் என்பதால் அம்மாதிரியான நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட் டுள்ளது. எனவே திருவாருர் மாவட்டத்தில் ஐஎஸ்ஐ தரச் சான்றில்லாத வாட்டர் ஹீட்டர், மின் சலவைப்பெட்டி, மின்சார அடுப்பு, மின் சுவிட்ச், எலக்ட்ரிக் ரேடியேட்டர்ஸ், சர்க்யூட் பிரேக்கர்ஸ் பல்புகள், பிவிசி கேபிள்கள் மற்றும் மின் உபகரணங்கள் ஆகியவற்றை தயாரிப்பதையும் அல்லது விற்பனை செய்வ தையும் கண்டிப்பாக தவிர்க்குமாறு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையா ளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தரம் குறைந்த பொருட்கள் தயாரிப்ப தும் விற்பனை செய்வதும் உறுதிசெய்யப்பட் டால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் தெரி வித்துள்ளார். மேலும் தர நிர்ணய சான்று பெற திருவாரூர் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளரை நேரிலோ அல்லது 04366-224402 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.