திருவாரூர், மே 21 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் ஆண்டிபந்தல் அருகே கடந்த 2021 ஆகஸ்ட் 29 ஆம் தேதி இளைஞர் ரமேஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் விசாரணை வளையத்துக்குள் வந்த பாக்கம் கொட்டூர் ஊராட்சியை சேர்ந்த முக மது முஸ்தபா மற்றும் முகமது மாலிக் இருவரும் காவல்துறையால் விடுவிக்கப் பட்டனர். இச்சம்பவத்தில் ரமேஷ் பயன்ப டுத்திய செல்போன், அவரிடமிருந்த ரொக்கப் பணம் மற்றும் தங்கச்சங்கிலி மாயமானது குறித்து காவல்துறை தரப்பில் எந்த விசா ரணையும் செய்யப்படவில்லை. மேலும் துரித கதியில் உடற்கூராய்வு செய்து முடித்து உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ள வற்புறுத்தியுள்ளனர். இதில் தொடர்புடைய மாலிக் மற்றும் முஸ்தபா இருவரும் தற்போது வெளிநாட் டுக்கு தப்பி சென்றுவிட்டனர். பாக்கம் கொட்டூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பஜ்ருல் ஹக் இவ்விருவருக்கும் உதவியாக செயல்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை செய்த நன்னிலம் காவல் ஆய்வாளர் சுகுணாவதியின் விசார ணையில் திருப்தியில்லை என்பதால் மறு விசா ரணை செய்யக் கோரி ரமேஷின் மனைவி கனகவள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாள ரிடம் கடந்த மாதம் புகார் அளித்திருந்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட அவர், நன்னி லம் டி.எஸ்.பி மூலம் மறுவிசாரணை செய்வ தாக உறுதியளித்திருந்தார். ஆனால் இன்று வரை நடத்தப்படாமல் உள்ளது. எனவே இன்னும் பத்து நாட்களுக்குள் விசாரணையை முடிக்காமல் தாமதப்படுத் தினால் நன்னிலம் காவல் நிலையத்தின் முன்பு கனகவள்ளிக்கு ஆதரவாக சிபிஎம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தெரிவித்துள்ளார். நன்னிலத்தில் மற்றோரு கோரிக்கைக்காக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.