districts

வலங்கைமான் பகுதியில்  மதுக்கடைகள் 2 நாட்கள் மூடல்

திருவாரூர், மார்ச் 25-  திருவாரும் மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில் வரத ராஜம்பேட்டையில் அமைந்துள்ள மகாமாரியம்மன் கோவிலில் நடைபெறும் பாடைக்கட்டி,  புஷ்பப்பல்லாக்கு திருவிழாவினை முன்னிட்டு மார்ச் 26, ஏப்ரல் 2 ஆகிய இரண்டு நாட்கள் அப்பகுதிகளில் உள்ள 9862 மற்றும் 9660  டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் அதனை சார்ந்துள்ள மதுக்கூடங்கள் முழுவதுமாக மூடப்படும்.  இந்த ஆணையை செயல்படுத்த தவறும்பட்சத்தில் தொடர்புடைய மதுபானக் கடைகளின் மேற்பார்வை யாளர்கள், மதுகூடங்களின் ஏலதாரர்கள் மீது சட்டப்படி யான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சி யர் தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளர்.

;