குடவாசல், ஆக. 31 - திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம், ஆய்க்குடி ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தோழர் பி.ராமதாஸ் நான்காம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் கல்வெட்டை திறந்து வைத்து, செங்கொடி யேற்றி அஞ்சலி உரையாற்றினார். சிபிஎம் கொரடாச்சேரி ஒன்றிய செயலா ளர் டி.ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.சீனிவா சன், எஸ்.தம்புசாமி, சிபிஎம் அரசவனங்காடு ஊராட்சி மன்ற தலைவர் சுலோக்சனா லோக நாதன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், வாலிபர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.