திருவாரூர், ஜுன் 15 - திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் காவல் சரகத் திற்குட்பட்ட பூவனூர் பகுதி யைச் சேர்ந்தவர் நீலமேகம். இவர் பூவனூர் கிளை அஞ்சல் அலுவலகத்தில் பணியிலிருந்த அஞ்சலக உதவியாளர் செந்தில்வேல னிடம், கடந்த 8.10.2018 அன்று தன்னுடைய பெயரில் 5 வருடத்திற்கு ரூ.25,00,000/- (ரூ.25 லட்சத்தை) வங்கி காசோலை கொடுத்து, டெ பாசிட் செய்ய கூறியுள்ளார்.
காசோலையை பெற்றுக் கொண்ட செந்தில்வேலன் ரூ.2,50,000-ஐ மட்டும் டெ பாசிட் செய்துவிட்டு மீத முள்ள ரூ.22,50,000-ஐ மோச டியாக கையாடல் செய்து உள்ளார். தொடர்ந்து தன் மேல் சந்தேகம் வராமல் இருக்க, நீலமேகத்திடம் கொடுத்த வங்கிப் பாஸ் புத்தகத்தில் ரூ.25 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டதாக கையால் எழுதி கொடுத்து உள்ளார்.
அதே போல் நீல மேகத்தின் மனைவி சுசீலா பெயரில் 2.11.2018 ஆம் தேதி ரூ.7 லட்சம் டெபாசிட் செய்ய சொல்லி வங்கி காசோலையாக கொடுத்த தொகையில் ரூ.70,000 மட்டும் டெபாசிட் செய்து விட்டு, மீதத் தொகை ரூ.6, 30,000-ஐ கையாடல் செய்து உள்ளார். சுசீலாவிற்கும் சந்தேகம் வராமல் இருப்ப தற்காக, பாஸ் புத்தகத்தில் ரூ.7 லட்சம் என கையால் எழுதிக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் 25.11.2020 ஆம் தேதி நீலமேகம் இறந்துவிட்டதால், முதிர்வு தேதிக்கு பின்பு (8.10.2023 மற்றும் 2.11.2023) முதிர்வு தொகையை பெறுவதற் காக, சுசீலா அஞ்சலகம் சென்று கேட்ட போதுதான் செந்தில்வேலன் செய்த மோசடி தெரிய வந்துள்ளது.
அதனை அஞ்சல்துறை உயர் அதிகாரிகளிடம் தெரி வித்து, சுசீலா மனு அளித் தார். அதன்பேரில், விசா ரணை செய்ததில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவம் அனைத்தும் உண்மை என தெரிய வந்தது. உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் மணிவேல், செந்தில்வேலன் ரூ.28,80,000 மற்றும் அதன் வட்டித் தொகையையும் நம்பிக்கை மோசடி செய்துள் ளார் என்றும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
காவல்துறை விசாரணை யில், செந்தில்வேலன் மோசடி செய்தது தெரிய வந்தது. மாவட்ட கண்காணிப் பாளர் ஜெயக்குமார் அறி வுறுத்துதலின்படி, உடனடி யாக செந்தில்வேலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.