districts

img

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துக! கூட்டுறவு ஊழியர் பேரவை வலியுறுத்தல்

 திருவாரூர், நவ.7-  தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் 15 ஆவது  மாநில பிரதிநிதித்துவ பேரவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை திரு வாரூரில் நடைபெற்றது.  ஞாயிற்றுக்கிழமை 2 ஆம்  நாள் துவங்கிய மகளிர் அமர்வுக்கு, மாநில மகளிர் துணைக் குழு அமைப்பாளர் சா.செல்வி தலை மை வகித்தார். “சிறகை விரிப் போம்! சிறையை தகர்ப்போம்...!” என்ற தலைப்பில் மாதர் சங்க துணைத் தலைவர் உ.வாசுகி கருத்துரை ஆற்றினார்.  சங்க பணியை நிறைவு செய்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களை பாராட்டி  நினைவு கேடயம் வழங்கப்பட் டது. மாநிலத் தலைவர் எம்.சௌந்தராஜன் துவக்க உரை யாற்றினார். மாநில பொதுச் செய லாளர் ஜெ.சேவியர் தொகுப்புரை ஆற்றினார். மேனாள் தலைவர் என்.இளங்கோ சிறப்புரையாற்றி னார்.
புதிய நிர்வாகிகள்
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் மாநில புதிய தலைவராக தி.க.இராமசாமி, பொதுச் செயலாளராக க. பிச்சைவேலு, பொருளாளராக ச. பாலகிருஷ்ணன் மற்றும் துணைத் தலைவர்களாக கே.எஸ்.மாரி யப்பன், என்.வேலாயுதம், பா.சிவக் குமார், த.இராமகிருட்டிணன், கோ.பழனியம்மாள், ரா.நவ நீதகிருஷ்ணன், இல.விஜயராம லிங்கம், க.ஆனந்தன், இணைச்  செயலாளர்களாக த.வினோத் ராஜா, பி.விஜயன், ரா.கீதாஸ்ரீ,  உ.சிங்காரவேலு, கே.சந்திர போஸ், அ.சாம்டேனியல், வி.கே.ஆர். மனோகரன், சிவ.பழனி, தலைமை நிலையச் செயலாளராக இரா.பட்டாபிராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை அறிவித்து  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு நிறைவுரையாற்றினார். மாவட்டத் தின் முன்னாள் செயலாளரும், மாநில துணைச் செயலாளருமான திருவாரூர் பி.விஜயன் நன்றி கூறி னார்.
தீர்மானங்கள்
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்டுள்ள ஒப்புவிப்பு விடுப்பு மற்றும் அகவிலைப்படி உயர்வை அமல்படுத்த வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை கிரேடு -3, பதிவறை எழுத்தர்கள், இளநிலை ஆய்வாளர் ஆகி யோருக்கான பதவி உயர்வை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.  பறிக்கப்பட்ட பணியிடங்களை மீண் டும் வழங்க வேண்டும். பயிற்சிக்  காலம் மற்றும் மகப்பேறு விடுப்புக்  காலத்தை தகுதியான பணிக் கால மாக மாற்றி உத்தரவிட வேண்டும். கூட்டுறவுச் சங்கம் மற்றும் நியாய விலைக் கடைகளில் கழிப்பறை  வசதி செய்து தர வேண்டும். ஆவின் மற்றும் கூட்டுறவு ஆலைகளில், கூட்டுறவுத் துறைகளில் அலுவ லர்களை நியமிக்க வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழக பணியாளர்கள் நிரந்தர ஈர்ப்பு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.