districts

திருவாரூரில் கனமழை பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம்

திருவாரூர், பிப்.2-  திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. சம்பா அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபடும் நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக மழை பெய்வது, விவசாயிகளை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது. இந்தநிலையில், திருவாரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை கனமழை பெய்தது. இதனால், அறுவடை பணிகள் பாதிப்பு அடைந்துள்ளன. மேலும் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பயிர்களை அறுவடை செய்யும் நிலையில் இந்த திடீர் மழையினால் பயிர்கள் சேதம் கண்டு விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.  எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எவ்வித  காரணம் காட்டாமல், காலம் தாழ்த்தாமல் நெல்லை  கொள்முதல் செய்ய வேண்டும் ஈரப்பதத்தை காரணம் காட்டி  விவசாயிகளே அலைக்கழிக்கக் கூடாது. மாவட்ட ஆட்சியரும் அரசு இதற்கான உரிய ஏற்பாடுகளை உடனே  மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.