districts

திருவாரூரில் கனமழை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இருவர் பலி

குடவாசல், ஆக.24 - தொடர்மழை காரணமாக வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் இருவர் பலி யாயினர்.  திருவாரூர் மாவட்டம் குடவாசல் மற்றும்  சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாயன்று மாலை பெய்த  தொடர் கனமழையால், குடவாசல் அருகே உள்ள வடவேர்-சேங்காலிபுரம் சாலையில் கூரை வீட்டில் மறைந்த கணேசனின் மனைவி  அலமேலு (70) வசித்து வந்தார். அன்று இரவு சுமார் 9 மணியளவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டின்  பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் படு காயம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பல னின்றி இரவு 11 மணியளவில் மூதாட்டி அலமேலு உயிரிழந்தார். இவர் அங்கன் வாடி ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற வர். இதேபோல் கொரடாச்சேரி அருகே கண் கொடுத்தவனிதம் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி (80) -இந்திராணி தம்பதி. இவர்கள்  இருவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, கனமழையின் காரணமாக சுவர் இடிந்து கணபதி மேல் விழுந்ததில் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி இந்திராணி ஆபத்தான நிலையில்  திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவங்கள் குறித்து குடவாசல் வட்டாட்சியர் தி.குருநாதன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் நேரில் சென்று பார்வை யிட்டு முதல் கட்ட உதவிகளை செய்துள்ள னர்.

;