districts

img

குடவாசல் அரசு கல்லூரியை பேரூராட்சி பகுதியிலேயே அமைத்திடுக! மாணவிகள் மாநாடு வலியுறுத்தல்

திருவாரூர், மார்ச் 1-  திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஜிடி மஹால்  திருமண அரங்கில் இந்திய மாணவர் சங்கத்தின்  மாணவிகள் மாநாடு நடைபெற்றது. மேலும் குட வாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரி மாணவிகள் பேரணியாக சென்றனர்.  மாநாட்டிற்கு மாவட்ட துணைத் தலைவர் எம். ஜெயந்தி தலைமை வகித்தார், இரா.சுந்தரி வர வேற்றார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் ரெ. கார்த்திகாதேவி, மாநிலக் குழு உறுப்பினர் ஜா. அபிஷா, க.வைகை ஆகியோர் பேசினர். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பா.ஆனந்த் வாழ்த்திப் பேசினார். மத்தியக்குழு உறுப்பினர் சி.மிருதுளா நிறைவுரையாற்றினார்.  மாநாட்டில், கன்வீனராக ஜா.அபிஷா, துணை கன்வீனர்களாக எம்.ஜெயந்தி, இரா.சுந்தரி, புவனா, லிவிஸ்டியா ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில், பெண்கள், மாணவிகள் மீதான பாலியல் கொடுமைகளை, பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் மீது நடக்கும் பாலியல் வன்முறைகளை தடுத்திட கடுமையான சட்டத்தை அமல்படுத்த வேண்டும், குடவாசல் அரசு கல்லூரியை குடவாசல் பேரூராட்சி பகுதியிலே அமைக்க வேண்டும், கூத்தா நல்லூர் மகளிர் அரசுக் கல்லூரியை மாணவிகளின் நலனுக்காக மாற்று இடத்தில் வகுப்புகளை நடத்திட  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

;