திருவாரூர், மார்ச் 29- திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமையன்று (மார்ச் 30) காலை 10.30 மணி முதல் 1.35 வரை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடை பெறவுள்ளது. கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துக்கொண்டு விவசாயி களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே, கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவ சாயம் சார்ந்த கோரிக்கைகளை தெரிவித்து தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கேட்டுக்கொண்டுள்ளார்.