திருவாரூர், ஜுன் 22 - தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 40 ஆம் (மாணிக்க) ஆண்டு பயிலரங்கம் ரோட்டரி ஹாலில் சனிக்கிழமை நடை பெற்றது.
அமைப்பின் மாவட்டத் தலைவர் சி.ராம சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் ஆர்.மகாலெட்சுமி முன்னிலை வகித்தார். சத்துணவு திட்டமும், ஆட்சியாளர்களின் நிலைப்பாடும் என்ற தலைப்பில் அமைப்பின் மாநிலத் தலைவர் ஆர்.கலா, சங்கமும் தலை மைப் பண்பும் என்ற தலைப்பில் அரசு ஊழி யர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வெ.சோமசுந்தரம், சத்துணவு திட்டத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.சௌந்தரராஜன் ஆகி யோர் கருத்துரை ஆற்றினர்.
அமைப்பின் மாநிலச் செயலாளர் ஏ.லதா, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் எஸ்.செங்குட்டுவன், செயலாளர் செ.பிர காஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட பொருளாளர் சி.வசந்தி நன்றி கூறினார்.
கருத்தரங்கத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.