districts

img

நூறு நாள் வேலையை பேரூராட்சி பகுதிக்கும் விரிவுபடுத்துக! வி.தொ.ச குடவாசல் ஒன்றிய மாநாடு கோரிக்கை

குடவாசல், நவ.26-  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் குடவாசல் ஒன்றிய மாநாடு சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு ஒன்றியத் தலைவர் ஜெ.சிவசாமி தலைமை வகித்தார். கொ டியை கே.நாகராஜ் ஏற்றி னார். மாவட்ட துணைச் செய லாளர் ஆர்.மணியன் துவக்கி  வைத்தார். குடவாசல் தெற்கு  பகுதிக் குழு ஒன்றியச் செய லாளர் எம்.கோபிநாத், நகரக் குழு செயலாளர் டி.ஜி. சேகர், மாவட்டக் குழு  உறுப்பினர் எப்.கெரக்கோ ரியா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டத் தலை வர் எம்.கலைமணி நிறை வுரையாற்றினார்.  மாநாட்டில், ஒன்றிய தலைவராக ஜெ.சிவசாமி, செயலாளராக சி.ஆனந்தன், பொருளாளராக என்.மருத வாணன் மற்றும் குடவாசல் நகர பகுதி தலைவராக கே. நாகராஜன், செயலாளராக எஸ்.அருமைக்கண்ணு ஆகி யோர் தேர்வு செய்யப்பட்ட னர். மாநாட்டில், 100 நாள்  வேலையை பேரூராட்சி  பகுதியில் விரிவுபடுத்த வேண்டும், விவசாயி களுக்கு உரம் தட்டுப்பாடு இன்றி வழங்க தமிழக உரிய  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.