திருவாரூர், பிப்.24- தமிழ்நாட்டில் போதை பொருட்களை நிரந்தரமாக தடை செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க எரவாஞ்சேரி பகுதி குழு சார்பில் கை யெழுத்து இயக்கம் ஒன்றியச் செயலாளர் ஆர்.மாரிமுத்து தலைமையில் நடை பெற்றது. எரவாஞ்சேரி உதவி காவல்துறை ஆய்வாளர் எஸ்.என்.சுகன்யா, ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜி.குமரன் ஆகியோர் முதல் கையெழுத்திட்டு பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்தனர். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சலாவுதீன், சிபிஎம் ஒன்றியச் செய லாளர் கே.ரவிச்சந்திரன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.