திருவாரூர், அக்.26 - திருவாரூர் மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டமாகும். இதைச் சுற்றி இருக்கக் கூடிய திருத்துறைப் பூண்டி, மன்னார்குடி, நன்னிலம், குட வாசல், கொரடாச்சேரி, வலங்கை மான் நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதி களில் இருந்து திருவாரூர் மாவட்டம் மையப் பகுதியாக உள்ளது. இங்குதான் பொதுமக்கள், மாண வர்கள், அரசு அலுவலர்கள், வணிகர்கள் என பலதரப்பட்ட மக்கள் தினமும் வந்து செல்லக் கூடிய பழைய பேருந்து நிலையமும் உள்ளது. ஆனால், பேருந்து நிலை யத்தை கட்டி பல ஆண்டுகள் ஆன தால் இடியும் நிலையில் மக்கள் பயன் படுத்த முடியாமல் இருந்து வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகள், இளைஞர் அமைப்புகள், வணிகர் சங்கங்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட் டம் நடத்தியதின் விளைவாக கடந்த அதிமுக ஆட்சியில், ரூ.2 கோடி 32 லட்சம் செலவில் இதற்கான கட்டு மானப் பணிகள் அவசர அவசரமாக துவங்கப்பட்டு, திருவாரூர் மையப் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு ஒரு சில ஆண்டுகளே ஆன நிலையில், அங்கு அமைக்கப்பட்டிருந்த பயனாளிகள் நாற்காலிகள், கழிவறைகள் பழுத டைந்து பயணிகள் பயன்படுத்த முடி யாமல் உள்ளது. அதேபோல திருவாரூர் முதல் தஞ்சாவூர் நெடுஞ்சாலையிலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு செல் லக்கூடிய அந்த சாலை குண்டும் குழியுமாக, மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. இதில் மக்கள் நடக்கக்கூட முடியாத நிலையும், இருசக்கர வாகனங்கள் சென்றால் விபத்துகள் ஏற்படக் கூடிய நிலையும் உள்ளது.
தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லக்கூடிய இந்த திருவாரூர் மாவட்ட மையப் பகுதியின் அருகில் தான் மருத்துவக் கல்லூரி, மருத்துவ மனை, மாவட்ட ஆட்சியர் அலுவல கம், மின்சார வாரியம், அரசு அலுவ லகங்கள், பள்ளி கல்லூரிகள் உள்ளன. இந்நிலையில், இது போன்ற தரமற்ற சாலையினால் தினமும் விபத்துகள் ஏற்படக்கூடிய நிலை உருவாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி, புதிய பேருந்து நிலையம் சமூக விரோதிகளின் கூடா ரமாக மாறியுள்ளது. அங்குள்ள கழி வறைகள் மற்றும் பயணிகள் தங்கும் விடுதியில் இரவு நேரங்களில் மது அருந்துவதும் தவறான நடவடிக்கை யில் ஈடுபடக்கூடிய நிலையும் உள்ளது. இரவு நேரங்களில் வெளி யூர் பயணிகள் வந்து செல்வதற்கு அச்சப்படுகின்றன. அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இரவு நேரங்களில் பயணி களுக்கு பாதுகாப்பாகவும், சமூக விரோத செயல்களில் ஈடுபடக்கூடிய நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது காவல்துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும், தற்போது மழைக்காலம் என்பதால் இந்த சாலை மேலும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. போர்க்கால அடிப்படையில் புதிய தரமான சாலை அமைத்திட நெடுஞ்சாலை துறையும், நகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.