நீடாமங்கலம், ஜூன் 4 - திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பி னரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளருமான வி.எஸ்.கலியபெருமாளின் மகளும், சிபிஎம் உறுப்பினரும் மாதர் சங்கத் தின் நிர்வாகியுமான தோழர் வி.எஸ்.கே. கல்பனா தேவி காலமானார். அவருக்கு வயது 41. சிறுநீரக செயலிழப்பின் காரணமாக சிகிச்சையில் இருந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி அவரது சொந்த ஊரான நீடா மங்கலம் ஒன்றியம் வையகளத்தூர் கிராமத் தில் உள்ள இல்லத்தில் காலமானார். அவரது கணவர் கல்யாணசுந்தரமும் கட்சி உறுப்பின ராக உள்ளார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். தோழர் கல்பனா தேவி காலமான செய்தி அறிந்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், திருவாரூர் மாவட்ட செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி, தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், விவசாயி கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.சுப்பிர மணியன், மாநில செயலாளர் சாமி.நடரா ஜன், திருவாரூர் தஞ்சை மாவட்ட செயலா ளர்கள் எஸ்.தம்புசாமி, செந்தில், மாதர் சங்க திருவாரூர் மாவட்டத் தலைவர் ரெ.சுமதி, மாவட்ட செயலாளர் கோமதி உள்ளிட்டோர் அன்னாரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். திருவாரூர், தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர் கள், இடைக்கமிட்டி உறுப்பினர்கள், ஒளிமதி, வையகளத்தூர், பழைய நீடாமங்கலம் கிராம மக்கள் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.