திருவாரூர், மார்ச் 10- விபத்து ஏற்படும் வகையில் சாலை ஓரத்தில் தனியார் செல்போன் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள சிமிண்ட் கம்பத்தை அகற்ற மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூரில் இருந்து குடவாசல் பகுதிக்கு செல்லும் மின்சார கம்பங் களில் தனியார் செல்போன் நிறுவனம் அலைவரிசை கேபிளை சிமிண்ட் கம்பத்தில் இணைத்து வருகிறது. மேலும் தனியார் அலைவரிசை நிறு வனம் ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்து புதிய சிமிண்ட் கம்பங்களை நிறுவி தங்களது அலை வரிசை கம்பியை பொருத்தி வருகிறது. இந்நிலையில், திருவாரூர்-குட வாசல் சாலையில் அரசவணங்காடு பெட்ரோல் பங்க் அருகே சாலை வளைவு ஓரத்தில் விபத்தும் ஏற்படும் வகையில் சிமிண்ட் கம்பம் அமைத்து தனியார் நிறுவனத்தின் அலைவரிசை கேபிள் வயர் நிறுவப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாரூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளரிடம் கேட்டபோது, அந்தப் பகுதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கேட்க வேண்டும் என கூறினார். எனவே, மாவட்ட நிர்வாகம் விபத்தும் நடைபெறும் முன்பு சாலை ஓரத்தில் தனியார் நிறுவனத்தால் அமைக்கப்படும் சிமிண்ட் கம்பத்தை உடனே அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.