districts

img

மன்னார்குடியில் புத்தக திருவிழா துவங்கியது

மன்னார்குடி, ஆக.19 - திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் புத்தகத் திருவிழா வியாழனன்று துவங்கி யது. புத்தகத் திருவிழாவை மாநில திட்டக் குழு துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் துவக்கி வைத்தார். முதல் விற்ப னையை மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.டி.ராஜா துவக்கி வைத்தார். முதல்  நாள் நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் த.சோழராஜன், நகர்மன்ற துணைத்தலைவர் ஆர்.கைலாசம் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். 11 நாட்கள் நடைபெறும் புத்தகத் திரு விழா ஆக.28 அன்று முடிவடைகிறது. ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் அறி ஞர்களின் உரைவீச்சு, வழக்காடு மன்றம், கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளன.

;