மன்னார்குடி, டிச.29- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் ர.கீர்த்தனாமணி தலை மையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்கத்தின் மாவட் டத் தலைவர் எஸ்.தம்புசாமி கலந்து கொண்டு பேசும்போது, ‘‘கேரளாவைப் போல நெல் கொள்முதல் விலை குவிண் டால் ஒன்றிற்கு ரூ.2870-ஐ அரசு அறி விக்க வேண்டும். ஒரு லட்சம் இலவச மின்னி ணைப்பு வழங்கப்படும் என அரசு அறி வித்தது. அதன்பிறகு 50 ஆயிரம் இலவச மின் இணைப்பு விவசாயிகளுக்கு வழங் கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு லட்சம் மின் இணைப்பில் 3 இல் ஒரு பங்கு மின் இணைப்பு இன்னும் வழங்கப்பட வில்லை. உடனே மின் இணைப்பு விண்ணப் பித்த நாளில் இருந்து முன்னுரிமை அடிப்ப டையில் வழங்கிடவேண்டும். முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கனவு திட்டங்களில் ஒன்றான உழவர் சந்தை கள் செயல்பட்டு வருகின்றன இதில், மன் னார்குடி உழவர் சந்தை மாநிலத்தில் மிகச் சிறந்த முதல் ஐந்து சந்தைகளில் ஒன்றாக வும் டெல்டா மாவட்டங்களில் முதன்மை சந்தையாகவும் செயல்பட்டு வருகிறது. புதிய பேருந்து நிலையம் மன்னார்குடியில் கட்டப்படவிருக்கும் நிலையில் உழவர் சந்தையை நிரந்தரமாக வேறு ஒரு இடத் தில் இடமாற்றம் செய்யவிருப்பதாக தக வல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறு செய் யப்பட்டால் அந்நடவடிக்கை டெல்டா மாவட்ட வேளாண் முன்னுரிமைகளுக்கு எதிராக அமையும் என்பதோடு மன்னார்குடி உழவர் சந்தை அதன் சிறப்புத் தன்மையை இழந்து விடும். அறுவடை துவங்க இருப்பதால் பழுத டைந்த நெல் தூற்றும் கருவிகளை பழுது நீக்கி முன்னதாக தயார் நிலையில் வைத்தி ருக்கவும் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களை முன் கூட்டியே உடனே திறந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். சிப்பத்திற்கு எந்த தொகையும் பிடித்தம் செய்யாமல் முழு தொகையும் விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும். 40 கிலோ 600 கிராமுக்கு கூடு தல் எடை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். திருத்துறைப்பூண்டியில் மட்டும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாக கொப்பரை தேங்காய் கொள்முதல் செய் யப்படுகிறது. மாவட்டத்தில் எல்லா வட்டா ரங்களுக்கும் இது விரிவுபடுத்தப்பட வேண்டும். கருவாக்குறிச்சி, எடமேலை யூர், பேரையூர், வடுவூர், மன்னார்குடி பகுதி களை சேர்ந்த விவசாயிகளுக்கு திருஆரூ ரான் சர்க்கரை ஆலையில் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகை உள்ளது.
அதைப் பெற்றுத் தருவதோடு விவசாயி கள் பெயரில் வங்கியில் வாங்கப்பட்டுள்ள கடனிலிருந்து விவசாயிகளை விடுதலை செய்வதற்கு அரசும் வங்கியும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். கொரடாச்சேரி-லெட்சுமாங்குடி சாலை யின் ஓரத்தில் கொரடாச்சேரி வெண்ண வாசல் ஊராட்சிக்குட்பட்ட எம்ஜிஆர் நக ரில் குடியிருந்து வரும் பத்து குடும்பங்களை பொதுப்பணித் துறையும் வருவாய்த் துறை யும் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இதை கைவிட்டு அருகாமை யில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். 100 நாள் வேலைக்கான ஊதியம் வழங்கும்போது நிலவும் சாதிய பாகு பாட்டை தடை செய்ய வேண்டும். முழுமை யான வேலை நாட்கள் சட்டக் கூலியோடு வழங்கிட வேண்டும். கோவில் நிலங்களில் குடியிருப்போர் அனைவருக்கும் சட்டப் பிரிவு 318-ஐ பயன்படுத்தி பட்டா வழங்கிட வேண்டும் கொரோனா காலம் முழுவதும் வாடகை ரத்து செய்ய வேண்டும். விருது பெற்ற மன்னார்குடி கூட்டுறவு பால் உற் பத்தி சங்கம் உற்பத்தியாளர்களிடம் இருந்து முழுமையான பாலை கொள்முதல் செய்ய வேண்டும். உரிய தொகையை தாம தமின்றி வழங்க வேண்டும். மதுக்கூர் சாலையை கடந்து செல்லும் மன்னார்குடி பைபாஸ் சாலையை பழுது நீக்கி புதுப்பித்திட வேண்டும் மன்னார் குடி இணைப்புச் சாலை ஆலத்தாங்குடி யிலிருந்து மணல் மேடு வரை குண்டுங் குழி யுமாக உள்ள சாலையை பழுது பார்த்திட வேண்டும்’’ என கூறியுள்ளார்.