திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று (ஏப்-3) நடைபெற்ற உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்துகொண்டு ஆட்டிஸம் குழந்தைகளுக்கு கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்தார். உடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, ஹோப் பொது நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் வே. நாகராணி, பேச்சு பயிற்சியாளர் சுப்புலட்சுமி, மாணவர்கள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.