திருவள்ளூர், மார்ச் 15- புதுகும்மிடிப்பூண்டியில் செயல்படாத ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், புதுகும்மிடிப் பூண்டி ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள ஆரம்ப துணை சுகாதார நிலையம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து விடும் போது, தடுப்பூசி போடுதல் போது மட்டும் திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் சுகாதார நிலையம் பூட்டியே கிடக்கும். இந்த சுகாதார நிலையம் திறக்கப்படாததால், முறையான பராமரிப்பின்றி சீரழிந்து வருகிறது. இதனால் பொது மக்கள் காய்ச்சல், தலைவலி, குழந்தைகள் மகப்பேறு போன்ற அத்தியாவசிய சிகிச்சைக்கு கூட தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. தனியார் மருத்துவ மனையில் கட்டணம் என் பெயரில் ஆயிரக் கணக்கான ரூபாயை செலுத்த வேண்டிய நிலைஉள்ளது.
சிபிஎம் வேண்டுகோள்
மக்களின் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம் உடனடியாக மருத்துவர் மற்றும் செவிலியர்களை நியமித்து துணை சுகாதார நிலையத்தை செயல்பட வைக்க வேண்டும். இது குறித்து ஜனவரி 26 அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக் குழு உறுப்பினர் வி.ஜோசப் வலியுறுத்தி யுள்ளார்.