திருவள்ளூர், ஜூலை 15- மருத்துவ படிப்பு வரை (எம்பிபிஎஸ்), இலவசமாக பழங்குடி இன மக்கள் கல்வி கற்கலாம் என சட்டத்தை வகுத்து விட்டு, இனச்சான்றிதழ் வழங்காத நிலையை போக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோங்கல்மேடு எஸ்டி காலனி யில் மலைக்குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் கொடியேற்றி, பெயர் பலகை திறப்பு விழா ஞாயிறன்று (ஜூலை 14), நடைபெற்றது.
அப்போது பேசிய தலைவர்கள், மருத்துவ படிப்பு வரை இலவசமாக பழங்குடி இன மக்கள் கல்வி கற்கலாம் என சட்டத்தை வகுத்து விட்டு, இனச் சான்றிதழ் வழங்காத போக்கு உள்ளது. கோங்கல்மேடு எஸ்டி காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட மலைக் குறவன் இன மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு இதுவரை பழங்குடியினர் இனச் சான்றிதழை அதிகாரிகள் வழங்காத தால் கல்வியை தொடர முடியாத நிலை உள்ளது. உடனடியாக பழங்குடியினர் இனச் சான்றிதழை வழங்க வேண்டும் என சங்கத்தின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ள னர்.
மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஏ.வி.சண்முகம் கொடியை ஏற்றி வைத்தார். மாநில துணை தலைவர் இ.கங்காதுரை பெயர் பலகையை திறந்து வைத்தார். மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் இ.ராஜேந்திரன், வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ப.லோகநாதன், பகுதி தலைவர் வசந்த் பௌத்த, மலைக்குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் மதி, பத்தையா, சீனு, ரவி ஆகியோர் பேசினர்.
புதிய நிர்வாகிகள்
கிளையின் தலைவராக பி.ரவி, செயலாள ராக சு.பாலாஜி, பொருளாளராக ர.விக் னேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.