districts

img

காணாமல்போன குளத்தை கண்டுபிடிக்க கோரிக்கை

திருவள்ளூர் ஏப் 11- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்களன்று (ஏப். 10) காலை சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூதூர் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்ற நபர் கையில் பதாகை ஏந்திய படி அய்யா குளத்தை காணோம், குளத்தை காணோம் கண்டுபிடிச்சு குடுங்க என்று  அலறியபடி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரித்த போது புதூர் ஊராட்சியில் 15க்கும் மேற்பட்ட குளங்கள் இருந்துள்ளது. (36) (38) (42) (74) (188) (342) (344) ஆகிய சர்வே எண்கள் அடங்கிய ஏழு குளங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அடுத்தடுத்து சிலர் ஆக்கிர மித்து உள்ளதாக கூறப்படுகிறது.  பல ஆண்டு களாக அப்பகுதி விவசாயிகள் பாச னத்திற்காகவும், தங்களது கால்நடைகளை பராமரிக்கவும் இந்த குளத்தின் நீரை பயன்படுத்தி வந்த நிலையில் ஆக்கிர மிக்கப்பட்ட குளங்களை மீட்டு தூர்வாரி பாசன பயன்பாட்டிற்கு கொண்டு வரக் கோரி பலமுறை ஏற்கனவே வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரையிலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என அவர் கூறினார்.  இந்த நிலையில் துணை வட்டாட்சியர் பாரதி புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்ப தாக அளித்த உறுதியை ஏற்று தனது போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவ தாக தெரிவித்த அந்த நபர், இதே நிலை தொடர்ந்தால் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடருவேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.