districts

img

பயிர் இழப்பீடுக்கான காப்பீடு தொகையை வழங்க விவசாயிகள் கோரிக்கை

 திருவள்ளூர், அக்.12- நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடுக்கான,  காப்பீடு தொகையை வழங்க  கோரி ஊத்துக் கோட்டையில்  புதனன்று (அக் 12) விவசாயிகள் ஊர்வலம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் கடந்த 2021-22 ல் நெல் சம்பா  பருவத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள்  பயிர் காப்பீடு செய்துள்ளனர். 10 மாதங்கள் ஆகியும் காப்பீட்டுத் தொகையை வேளாண் துறையினர் வழங்கவில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டம் நடைபெற்றது. ஊத்துக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே இருந்து  வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசி நாராயணன்,மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், மாவட்டத் துணைச் தலைவர் பி.ரவி, மாவட்ட குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, வழக்கறிஞர் வாசுதேவன், பாதிக்கப்பட்ட விவசாயிகள் ெஜயக்குமார், குணசேகரன், சசிகுமார், மாளந்தூர் ஊராட்சி மன்ற தலை வர் வி.விஜயன்  ஆகியோர்  உரையாற்றி னர். பின்னர்,வேளாண்மை உதவி இயக்கு நர் இளங்கோவனிடம் கோரிக்கை மனுவை  வழங்கினர்.  மனுவை பெற்றுக்கொண்ட  இயக்குநர்,   தமிழக அரசு ரூ.481 கோடி நிதி ஒதுக்கி யுள்ளது. விரைவில் இழப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதை ஏற்று விவசாயி கள் அனைவரும் கலைந்து சென்றனர்.