districts

img

பாம்புகள் உலாவும் குடிசைகள்: இருளர் இன மக்களின் அவலம்!

திருவள்ளூர், ஜன. 24- திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஆஞ்சநேயர் கோவில் தெரு அருகில் ஆற்றங் கரை ஓரத்தில் 25-க்கும் மேற்பட்ட   இருளர் இன மக்கள் 10ஆண்டு களுக்கு மேலாக குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர். இவர்களுக்கு  அடிப்படையான வசதிகள் ஏதும் செய்து தரப்பட வில்லை. சாலையும் வசதியும் கிடையாது. தெருவிளக்கு இல்லை. இதுநாள் வரை குடிமனைப் பட்டாவும் கொடுக்கவில்லை. கூவம் ஆற்று குட்டை ஊற்று தண்ணீர் எடுத்து  வந்து வடிகட்டி குடிக்கும் அளவுக்கு  நிலைமை படுமோசமாக இருக்கிறது. இதனால், இருளர் இன மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியது குறித்து தீக்கதிரில் கடந்த ஜூன் மாதம் 18 ஆம்  தேதி செய்தி வெளியிட்டடது.  பிறகு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் வாழ்விடத்தில் குடிநீருக்காக கைபம்பு ஒன்றையும் அமைத்து கொடுத்தார் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர். மேலும், ஒரு மாதத்தில் மாற்று இடத்தில் பட்டா வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். ஆனால் 7 மாதங்கள் கடந்த பிறகும்  மாற்று இடத்தில் பட்டா வழங்க வில்லை. இதற்கிடையில், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மூலம் தொண்டு நிறுவனங்களை அணுகி சோலார்  தெரு விளக்கு, மேற்கூரைக்கு பிளாஸ்டிக் படுதாவும் வழங்கப் பட்டது. தற்போது, குடிசைகளுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளன. இன்னுமும் பட்டா வந்த பாடு இல்லை. பாதுகாப்பற்ற சூழலில் இருளர் இன மக்கள் வாழ்ந்து வரு கிறார்கள். இதுகுறித்து தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு கூறுகையில், “ மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தப்படி, இருளர் இன மக்களுக்கு மாற்று இடத்தில் உடன டியாக பட்டா வழங்கி தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்க  வேண்டும் என்றும் அந்த மக்களின்  அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்”என்றும் வலி யுறுத்தினார்.