திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகில் உள்ள நல்லூர் ஊராட்சியில் முடப்பட்ட துணை சுகாதார நிலையத்தை திறக்க வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று (நவ 27) பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் வி.ஆர்.லட்சுமணன், ஒன்றிய தலைவர் இ.கோதண்டன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பி.நடேசன், ஆட்டோ சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரசேகரன், கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் டி.ஆர்.முனுசாமி உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.