districts

img

பாம்பு கடித்து பள்ளி மாணவன் பலி

திருவள்ளூர், அக்.5- திருவள்ளூர் மாவட்டம்,  பொன்னேரி அருகிலுள்ள ஆரணி எஸ்.பி.கோவில் தெருவில் வசித்து வருபவர் பாபு. இவர் கூலி வேலை செய்து வருகிறார்.  பாபு-விஜயலட்சுமி தம்பதிக்கு ரமேஷ் (14), தேவராஜ் 13)இரண்டு மகன்கள். மூத்த மகன்  ரமேஷ்  9 ஆம் வகுப்பும், இளைய மகன் தேவராஜ் 8 ஆம் வகுப்பும்  அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.  இந்நிலையில், அக் 4அன்று  இரவு குடிசைக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது பாபு மீது தன் மீது ஏதோ ஊர்ந்து செல் வதைப் போன்று உணர்ந் தார். இதனால் மின் விளக்கை எரிய விட்டு பார்த்தபோது பாம்பு ஒன்று நெளிந்து சென்றதை கண்டு திடுக்கிட்டார். உடனடியாக தங்களது இரண்டு மகன் களையும் அருகில் இருந்த வீட்டில் கொண்டு சென்று பாதுகாப்பாக படுக்க வைத்தார். பின்னர், விரைந்து வந்து  அந்தப் பாம்பை அடித்துக் கொன்றார். சிறிது நேரத்தில்  தனது இரண்டு மகன்க ளும் வாந்தி எடுத்து மயக்க மானார்கள்.  இருவரையும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக திருவள்ளூர் அரசு  மருத்துவமனைக்கு கொண்டனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ரமேஷ்  இறந்து விட்டதாக கூறி னார். தேவராஜ்க்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வரு கின்றனர்.இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆரணி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசா ரணை செய்து வருகின்ற னர்.

;