districts

img

செயற்கைக்கோள் தயாரிப்பு அரசுப்பள்ளி மாணவிகள் அசத்தல்

திருவள்ளூர்.ஜன,17  அரசு பள்ளி மாணவர்களுக்கு செயற்கை கோள் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்க ளுக்கு இதற்காக  பல்வேறு கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டன.  3ஆம் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 75 பேர் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்படுவதை பார்வையிட அனுமதிக்கப் பட்டனர். இந்த குழுவில் திருவள்ளூர் மாவட்டம், சிறுவானூர் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன்-சரஸ்வதி தம்பதியின் மகள் இவாஞ்சலின், கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன்- கல்யாணி தம்பதி யின் மகள் அனுஜாசிவானி தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இவர்கள், 75-வது ஆண்டு பவள விழா சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு உருவாக்கி வரும் 75 மாணவர் செயற்கைகோளில் ஒன்றை உருவாக்கும் வாய்ப்பை பெற்று உள்ளனர். இதனால் மாணவிகள் இவாஞ்சலின், அனுஜா சிவானி ஆகிய இருவரும் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 2ஆம் தேதி முதல் 5 ஆம்தேதி வரை பெங்க ளூரு இஸ்ரோ மையத்தில் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழக அரசு  பள்ளியில் உள்ள மாணவர்களால் “அகத்தியர்” என்ற பெயரில் செயற்கை கோள் உருவாக்கப்பட இருப்பது குறிப்பிட த்தக்கது. இதுகுறித்து மாணவிகள் இவாஞ்சி லின், அனுஜா சிவானி ஆகியோர் கூறிய தாவது:- பெரிய விஞ்ஞானிகள் மட்டுமே வந்து செல்லக் கூடிய ஸ்ரீஹரிகோட்டாவுக்கு நாங்களும் சென்றது மகிழ்ச்சியாக உள்ளது. விஞ்ஞானிகள் எங்களுக்கு வகுப்பு எடுத்தது பெரிய அனுபவத்தையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. செயற்கைகோள் செய்யக் கூடிய மாணவியாக நாங்கள் சென்றது எங்களுக்கு பெருமிதமாக உள்ளது.  தேர்வு செய்யப்பட்ட 75 பேருக்கும் பயிற்சி  கொடுக்கப்பட்டு வருகிறது. பின்னர் அவர் களை தனித்தனி குழுக்களாக பிரித்து அவர்கள் செய்ய வேண்டிய பணிகளை ஒப்ப டைப்பார்கள். எங்களுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன், கணித ஆசிரியர் ஜெகதீஸ்வரி ஆகியோருக்கு நன்றி தெரி வித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.  மாணவிகள் இருவரும் திருப்பாச்சூரில் உள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து  வருகிறார்கள். இவர்களில் இவாஞ்சலின் ஆட்டோ ஓட்டுநரின் மகள் ஆவார்.