திருவள்ளூர், நவ. 8- கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் மங்காவரம் முதல் அப்பாவரம் வரை செல்லும் ஒன்றிய சாலையை சீரமைக்கக் கோரி அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் சார்பில் சாலையில் நாற்று நடும் போராட்டம் செவ்வாயன்று (நவ 8) நடைபெற்றது . திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டியை அடுத்த மங்காவரம் முதல் அப்பாவரம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் சாலை சேதமடைந்து, சாலை முழுவதும் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலையில் செல்வோர் அடிக்கடி விபத்து களில் சிக்கி காயமடைகின்றனர். பூ விவசாயிகள், காய்கறிகள் விளைவிக்க கூடியவர்கள் பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் அவதிப்படு கின்றனர். அந்த வழித்தடத்தில் இயங்கி வந்த அரசு பேருந்தும் நிறுத்தப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் பலமுறை போராடியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் சாலையை சீரமைக்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மங்காவரத்தில் சாலையில் நாற்று நடும் போராட்டம் வட்ட நிர்வாகிகள் ஜோதி, செல்வம், மனோகரன், குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட துணைத் தலை வர் இ.ராஜேந்திரன், வட்டச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ப.லொக நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் ருத்ரமூர்த்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பழைய டெண்டர் ரத்து செய்யப் பட்டு விட்ட நிலையில், சாலையை மேம்படுத்த புதிதாக 1,400 மீட்டருக்கு 72 லட்சம் ரூபாயில் திட்ட மதிப்பீடு அனுப்பப் பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று விரைவில் சாலை அமைக்கப்படும் என உறுதியளித்தார். ஒரு மாதத்திற்குள் சாலை பணி ஆரம்பிக் காவிட்டால், வட்டார வளர்ச்சி அலுவல கத்தை முற்றுகையிடுவோம் என சங்க நிர்வாகிகள் தெரிவித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.