districts

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்

திருவள்ளூர், ஏப் 29- திருவள்ளுர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதை விற்ற கடை  உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கப் பட்டது ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப் படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை  அறிவிப்பு தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி பிளாஸ்டிக்  தாள்கள், தண்ணீர் பைகள், பாக்கெட்டு கள்,  பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் மற்றும்  பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும்,  விநியோகிப்பதும்,  விற்பதும், பயன்படுத்துவ தும் தமிழ்நாட்டில் 2019 ஜனவரி 1 முதல் தடை செய்யப்பட்டுள்ளது.  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து  புகார்கள் வந்ததின் அடிப்படை யில்,   திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள  அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களில் ஏப்ரல் 25 அன்று  அந்ததந்த பகுதியில் உள்ள உள்ளாட்சித் துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள்  இணைந்து  திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது திருவள்ளுர் மாவட்டத் தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை விற்பனை மற்றும் சேமித்து வைத்திருந்த வணிக நிறுவனங்களிலிருந்து 1.621 டன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 114 வணிக நிறுவனங்களின் உரிமை யாளர்களுக்கு உள்ளாட்சி துறை அதிகாரி கள் மூலம் அபராதம் ரூ. 1,04,750 வசூலிக்கப் பட்டது. தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும்  வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ்  எச்சரித்துள்ளார்.