திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் மையங்களை திறன்மிகு அங்கன்வாடி மையங்களாக மாற்றம் செய்ய “ஸ்மார்ட் அங்கன்வாடி மையம்” என்ற பெயரில் அமைப்பதற்கான லோகோ-வை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார். தமிழ்நாடு பாட நூல் நிறுவனத் தலைவர் திண்டுக்கல் ஜ.லியோனி, மாவட்டச் சாராட்சியர் மகாபாரதி, பேராசிரியர் பர்வீன் சுல்தானா, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.