districts

ஆட்சியர் அலுவலக உணவகத்தில் ‘பீப்’ பிரியாணி விற்க அனுமதி

திருவள்ளூர்,பிப்.3- திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் நடத்தும் 3  உணவகங்களில் பீப்பிரி யாணி விற்க அனுமதிக்கப் பட்டுள்ளது. இங்கு தயிர் சாதம்,  சாம்பார் சாதம், கருவேப் பிலை சாதம், பிரிஞ்சி சாப் பாடு, கேழ்வரகு களி உள்ளிட்ட உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த உணவகத்தில் மாட்டிறைச்சி உணவும் சேர்க்க வேண்டும் என்று திருவள்ளுர் மாவட்ட முன்னாள் ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் மோகன் என்பவர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான்  வர்கீசிடம் மனு அளித்திருந் தார். அத்தகைய மனுவை ஆட்சியர் முதலில் நிரா கரித்திருந்தார். இதனை எதிர்த்து மோகன், தேசிய  தாழ்த்தப்பட்ட ஆணை யத்தில் முறையிட்டார். ஆட்சியர்  அலுவலக வளா கத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் நடத்தும் உணவ கத்தில் மாட்டு இறைச்சி போன்ற அசைவ உணவு களும் சேர்க்க  உத்தரவிட வேண்டும் என்று தெரி வித்து இருந்தார். இதைத்தொடர்ந்து பீப்  பிரியாணி சேர்க்கப்பட் டுள்ளது. இதன் விலை ரூ.100 ஆகும். இதேபோல் அசைவ உணவுக்கான விலைப் பட்டியலும் உணவு  விடுதி முன்பாக பேனராக  வைத்துள்ளனர். தமிழ் நாட்டில் முதல் முறையாக  திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள  உணவகத்தில் மாட்டி றைச்சி உணவு சேர்க்கப் பட்டு இருப்பது குறிப்பிடத் தக்கது.