திருவள்ளூர்,ஏப்.12- பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கட்டுப் பாட்டில் 43 ஊராட்சிகள் உள்ளது. அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரு கின்றன. இதில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகள் மற்றும் நலிந்த ஏழைப் பய னாளிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்க வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விவ சாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தென்னை கன்று களை முறையாக பாது காக்காமல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள கழிவறையில் வைத்துள்ளனர். அதிகாரி கள் அலட்சியமாக தென்னங் கன்றுகளை வைத்து இருப்ப தாக அவர்கள் குற்றம் சாட்டி யுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விவசாயிகளுக்கு சேர வேண்டிய நலத்திட்ட உதவிகளை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.