திருவள்ளூர், ஜூலை 31- சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை குறைத்திட வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கட்டு மான தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்ட கட்டுமான தொழி லாளர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு ஞாயி றன்று (ஜூலை 31) தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் எம்.நாகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம் கொடியேற்றினார்.மாவட்ட துணைச் செயலாளர் இ.வேலன் வர வேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் எம்.சி.சீனு அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன் துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செய லாளர் ெஜ.ராபர்ட் எபிநேசர் வேலை அறிக் கையையும், பொருளாளர் வி.ஆர்.லட்சு மணன் வரவு- செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கட்டுமான சங்க மாநில துணைச் செயலாளர் ஏ.நடராஜன் மாநாட்டை நிரைவு செய்து பேசினர்.பகுதி செயலாளர் இ.எல்.சீனிவாசன் நன்றி கூறினார்.
புதிய நிர்வாகிகள்
கட்டுமான சங்கத்தின் மாவட்ட மாநாட் டில் இரண்டு கமிட்டிகளாக பிரிக்கப்பட்டது.பொன்னேரியை மையப்படுத்தி கிழக்கு மாவட்டத் தலைவராக வி.ஆர்.லட்சுமணன், செயலாளராக எம்.நாகராஜ், பொருளா ளராக எம்.சி.சீனு ஆகியோரும், திருவள் ளூரை மையப்படுத்தி மேற்கு மாவட்ட தலை வராக டி.கணேசன், செயலாளராக இ.எல்.சீனிவாசன், பொருளாளராக இ.வேலன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்
நலவாரியத்தில் பதிவு செய்த அனை வருக்கும் இலவச பேருந்து பயண திட்ட த்தை அமலாக்க வேண்டும், ஆன்லைன் பதிவை எளிமையாக்க வேண்டும், மழைக் காலத்தில் வேலையில்லா கால நிவார ணமாக ரூ.5000 வழங்க வேண்டும், ஓய்வூ தியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், வட்டார அளவில் அரசே குடோன்கள் அமைத்து குறைந்த விலையில் மணல் வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.